search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைப்பந்து போட்டி- மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 3-ம் இடம்
    X

    வெற்றி பெற்ற மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி அணியினருடன் பள்ளி ஆசிரியர்கள்.

    கைப்பந்து போட்டி- மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 3-ம் இடம்

    • முதல் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியும், 2-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி அணியினரும் பெற்றனர்.
    • போட்டியில்வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கோப்பைகள், பரிசு தொகை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து நடுநிலைப்பள்ளியில் மடத்தூர் எஸ்.கே.பி. குத்தாலிங்கம் நாடார் நினைவாக, பள்ளியின் நிர்வாகி கதிர்வேல் முருகன் தலைமையில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 14 மற்றும் 17 வயதிற்கான கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியும், 2-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி அணியினரும், 3-ம் பரிசை மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி அணியினரும், 4-ம் பரிசை மதுரை ரிசர்வ் லைன் மேல்நிலைப்பள்ளி அணியினரும் பெற்றனர்.

    17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், 2-ம் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியினரும்,3-ம் பரிசை மதுரை ரிசர்வ் லைன் மேல்நிலைப்பள்ளி அணியினரும், 4-ம் பரிசை அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி அணியினரும் பெற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கோப்பைகள், பரிசு தொகை மற்றும் அணி வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    விழாவில் கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண பாரதி மற்றும் புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ராஜேஷ், பிரவீன், அகஸ்டின் மற்றும் ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×