search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
    X

    நீட் தேர்வில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    தருமபுரி,

    விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் நரேன் 652-720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மற்றும் தி விஜய் மில்லினியம் சிபிஎஸ்இ பள்ளிகளில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் 2023 ல் நடைபெற்ற நீட் தேர்வில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை பெற தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் நரேன் 652-720 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஐவன்மாக்ஸிமஸ்நாதன் 650-720 பெற்று இரண்டாம் இடமும், சுகேஷ்வரன் 643-720 மூன்றாமிடமும், தமிழ் வழியில் நீட் பயிற்சி பெற்ற மாணவி சித்ரா 506-720 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர் பிரேம், சிநேகா பிரவின், பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரபானு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் பயின்ற முதல் மூன்று இடங்கள் மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் குழுமத்தின் தலைவர் இளங்கோவன் தலா ரூ.1,00,000 மதிப்பிலான காசோலை களை வழங்கி மாணவர்களை ஊக்கப்ப டுத்தினார்.

    விழாவில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியின் மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி, இயக்குநர் கல்யாண் பாபு மற்றும் பள்ளி முதல்வர்கள் பத்மா, ஜமுனா, நவீதா சங்கர், சன்ராபின் மூத்த முதல்வர் துரைராஜ் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×