என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் தூக்கிட்டு தற்கொலை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யாசின்பாஷா (வயது 30), தக்காளி வியாபாரி.
இவரது மனைவி தாசின் (23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று யாசின்பாஷா வழக்கம்போல் தக்காளி வியாபாரத்திற்கும், பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றுவிட்டனர்.
தாசின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது.
நீண்ட நேரம் கதவு தட்டியும் தாசின் திறக்கவில்லை . இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது தாசின் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்