search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    பெண் தூக்கிட்டு தற்கொலை

    • நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யாசின்பாஷா (வயது 30), தக்காளி வியாபாரி.

    இவரது மனைவி தாசின் (23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று யாசின்பாஷா வழக்கம்போல் தக்காளி வியாபாரத்திற்கும், பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றுவிட்டனர்.

    தாசின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது.

    நீண்ட நேரம் கதவு தட்டியும் தாசின் திறக்கவில்லை . இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தாசின் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×