search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் 55 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    தொடர் மழையால் 55 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    • தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து 54.99 அடியை எட்டியது.

    கூடலூர்:

    பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 128.20 அடியாக உள்ளது. அணைக்கு 1509 கனஅடிநீர் வருகிறது. 1633 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கும் கீழ் சென்றது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையாலும், பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் அணைக்கு நீர்வரத்து 1612 கனஅடியாக உள்ளது.

    இதனால் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 54.99 அடியை எட்டியது. அணையில் இருந்து மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17, தேக்கடி 15, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 0.8, வீரபாண்டி 8.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×