search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயம்
    X

    குமாரபாளையத்தில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயம்

    குமாரபாளையத்தில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் குப்புலட்சுமி(வயது 54). கூலி தொழிலாளி. இவர் இரவு சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு, காளியம்மன் கோவில் பகுதியில் தனது மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த கார் மோதியதில், குப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமார பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் ஈரோடு, சென்னிமலை ரோட்டை சேர்ந்த மளிகை கடை தொழில் செய்து வரும் கார்த்திகேயன்(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கோபி(29), கட்டிட தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பிரிவு சாலையில் மொபட்டில் சென்றார்.

    அதே வழியில் வந்த வேன், மோதியதில், கோபி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ், (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×