search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் பெண்ணை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி
    X

    இளம் பெண்ணை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி

    • கனகா சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்
    • கனகாவிடம் அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் எடுப்பதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.

    ஆபாச படம்

    இவரது மனைவி கனகா (வயது 32). இவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    அங்கிருந்த எடப்பாடி வீரப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேAல்சத்ரியன் (38) என்பவர் கனகாவிடம் அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் எடுப்பதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கனகா வேலையை விட்டு நின்று விட்டார்.இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கனகா அந்த அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த வேல் சத்ரியன் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் ஜெயஜோதி ஆகியோர் கனகாவிடம் ஆபாச படத்தில் நடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் தகராறும் செய்துள்ளனர்.

    2 பேர் கைது

    இதுகுறித்து கனகா உடனடியாக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து வேல் சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×