என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
Byமாலை மலர்11 Aug 2023 6:52 AM GMT
- எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியது
- அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்
மணப்பாறை
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள பிச்சைரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது கான்கிரிட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து அதில் சமையல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியை பார்த்ததும் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் ஓடி விட்டனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். ஆனாலும் சிறிது நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்ததுடன் அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X