search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி டிராக்டர் திருடியவர் கைது
    X

    மாநகராட்சி டிராக்டர் திருடியவர் கைது

    • மாநகராட்சி டிராக்டர் திருடியவரை போலீசார் கைது ெசய்தனர்
    • புதுக்கோட்டையை சேர்ந்தவர் என்பது ெதரியவந்தது

    திருச்சி:

    திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மதியழகன். இவர் திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ந் தேதி மாலை மதியழகன் மாநகராட்சியின் டிராக்டர் வாகனத்தை உழவர் சந்தை பகுதியில் உள்ள மைதானத்தில் நிறுத்திவிட்டு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் வாகனத்தை எடுப்பதற்காக வந்தபோது வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து மதியழகன் தில்லைநகர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் மாநகராட்சியின் டிராக்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்ததோடு அவர் திருடிச்சென்ற டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×