search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணத்திற்கு பெண் தர மறுத்த தாயை குத்தி கொன்ற வாலிபர் கைது
    X

    திருமணத்திற்கு பெண் தர மறுத்த தாயை குத்தி கொன்ற வாலிபர் கைது

    • ஷகிதா பேகத்தின் ஒரு மகளைஅவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார்.
    • அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ஷகிதா பேகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    திருச்சி,

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷகிதா பேகம் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஷகிதா பேகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் ஷகிதா பேகத்தின் அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வாலிபர் ஒருவர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஷகிதா பேகத்தின் வீட்டின் பின்பக்க ஓட்டை பிரித்துக்கொண்டு குதித்து தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷகிதா பேகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ஷகிதா பேகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பொன்னி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை பொன்மலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஜோசப் ராஜ் என்பதும், ஷகிதா பேகத்தின் ஒரு மகளைஅவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு ஷகிதா பேகம் மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஷகிதா பேகத்தின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய அவன் மறைந்து இருந்துள்ளான். பின்னர் ஷகிதா வந்தவுடன் தகராறு செய்து அவர் மீது மிளகாய் பொடி தூவி ஷகிதா பேகத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக பொன்மலை போலீசார் ஜோசப் ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் கத்தியால் குத்தப்பட்ட ஷகிதா பேகம் இன்று சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மகளைத் திருமணம் செய்து தர மறுத்ததால் தாய் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×