search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை தாக்கி கடித்து வைத்த மனைவி
    X

    கணவரை தாக்கி கடித்து வைத்த மனைவி

    • குடும்ப தகராறு காரணமாக கணவரை, மனைவி கடித்து குதறினார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் மாருதி நகர், நந்தா நகர் ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் இனிகோ (வயது 42). இவரது மனைவி டெய்ஸி ராணி (36). திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பரஸ்பரம் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களது உறவினர்கள் பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு பின்னர் பிரிந்து தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர். ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆத்திரம் அடைந்த டெய்ஸி ராணி, கணவர் என்றும் பாராமல் இனிகோவை சரமாரியாக அடித்து உடைத்தார். ஆத்திரம் தீராத அவர் இனிகோவின் கைகளில் கடித்தும் வைத்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து இனிகோ கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெய்ஸி ராணியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தகராறில் கணவரின் கையை மனைவி கடித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Next Story
    ×