search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி தெற்கு தாராநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் திவாகர் (வயது 21). இவர் குடிப்பழக்கம் உடையவர். இவர் ஒரு வழக்கில் திருச்சி நீதிமன்றம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த திவாகர், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் தீபராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×