என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்று பயிர் சாகுபடிக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
- மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.
திருச்சி :
தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தா.பேட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியின் உளுந்து, நிலக்கடலை, சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறு தானியங்கள் தொகுப்பில் விதைகள், உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.
பயறு தொகுப்பில் ரூ1,250, ரூ1,570-ம், எண்ணெய் வித்து தொகுப்பில் ரூ 4,002, ரூ5,600-ம் மானியமும் இடுபொருள்களுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்