search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிளகாய்பொடி தூவி  ரூ.8 லட்சம் கொள்ளை
    X

    மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை

    • திருச்சியில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
    • இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து துணிகரம்

    மண்ணச்சநல்லூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி காரைக்கோட்டை பகுதியை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர், திருச்சி மாவட்டம் கிளிக்கூடு மணல் குவாரியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் மணல் குவாரியில் வசூலான பணத்துடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.உத்தமர்சீலி மேலவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மணிகண்டன் சென்ற வாகனத்தில் மோதினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடிைய தூவி, அவர் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் மணி கண்டன் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×