search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணின் தாலி செயின் பறிப்பு
    X

    பெண்ணின் தாலி செயின் பறிப்பு

    • பெண்ணின் தாலி செயினை பறிப்பு சம்பவம்
    • செயினை பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி,

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் குமார்.இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 24) இவர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு தின்பண்டங்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி சிவரஞ்சனி அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பொன்மலை போலீசில் ஒப்படைத்தனர். விசார ணையில் பிடிபட்ட வர் திருச்சி மேல கல்க ண்டார் கோட்டை சாமிநா தன் தெருவை சேர்ந்த சுதாகர்( 45) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×