search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
    X

    மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்

    • மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள்

    திருச்சி:

    தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் தெவராயப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புண்யாகவாகனம், அணுக்கை, வாஸ்துசாந்தி, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நாடி சந்தானம், பிம்பசுத்தி, யாகவேள்வி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.

    Next Story
    ×