என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பு
Byமாலை மலர்22 July 2023 8:56 AM GMT
- கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் மோட்டார் சைக்கிள் - பணம் பறிப்பு
- வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்த போலீசார்
திருச்சி,
திருச்சி சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி இருசக்கர வாகனத்தையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காந்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வழிப்பறி செய்த ஸ்ரீரங்கம் சிங்கர்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X