search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
    X

    மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

    • மொபட்டில் சென்ற பெண் ஆசிரியரை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள்
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் ஹரிணி (வயது 24). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது சென்னை பைபாஸ் சாலையில் வந்த பொழுது திடீரென்று ஹரிணி மற்றும் அவரது தோழியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் வழிமறித்தனர்.பின்னர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றை பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.இது குறித்து ஹரிணி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிணியிடம் நகையைப் பற்றிச் சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×