search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்துறை 4.0 உற்பத்தி திறனை அதிகப்படுத்தியுள்ளது - திருச்சி என்.ஐ.டி. கருத்தரங்கில் தகவல்
    X

    தொழில்துறை 4.0 உற்பத்தி திறனை அதிகப்படுத்தியுள்ளது - திருச்சி என்.ஐ.டி. கருத்தரங்கில் தகவல்

    • அமெரிக்காவின் மத்திய கனெக்டிக்கட் மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரவீந்திர தம்மா பேசுகையில், தொழில்துறை 4.0வுக்கான பாதையில் மாற்றங்களை கொண்டு வருவதாக டிஜிட்டல் மயமும், ஆட்டோமேஷனும் உள்ளன என்று கூறினார்.
    • நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்டர் என் சிவகுமாரன், டாக்டர் கே.தனலட்சுமி மற்றும் மாணவர் பிரிவின் தலைவர் பவானி கோரிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி :

    திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், சர்வதேச ஆட்டோமேஷன் சங்கத்துடன் இணைந்து தொழில்துறை உற்பத்தி திறன் குறித்த கருத்தரங்கத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அமெரிக்காவின் மத்திய கனெக்டிக்கட் மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரவீந்திர தம்மா பேசுகையில், தொழில்துறை 4.0வுக்கான பாதையில் மாற்றங்களை கொண்டு வருவதாக டிஜிட்டல் மயமும், ஆட்டோமேஷனும் உள்ளன என்று கூறினார்.

    தற்போதைய சூழலில் கூடுதலான உற்பத்தி, 3டி அச்சு, நிகழ்நேர திறன், டிஜிட்டல் மயம், ரோபோ மயம் போன்றவை தொழில்துறை 4.0வுக்கு முக்கியமானதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்டர் என் சிவகுமாரன், டாக்டர் கே.தனலட்சுமி மற்றும் மாணவர் பிரிவின் தலைவர் பவானி கோரிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×