என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணவர் கண்முன் பெண்ணின் 7 பவுன் செயின் பறிப்பு
- பைக்கை வழிமறித்து கணவர் கண்முன் பெண்ணின் 7 பவுன் செயின் பறிப்பு
- 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர். இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் விசேஷத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்களை வழியனுப்பதற்காக கண்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் சென்றார். பின்னர் உறவினர்களை ரயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பினர். சென்னை பைபாஸ் சாலை காவேரி பாலத்தின் அருகாமையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் அவர்களை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கண்ணன் கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்