என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஐ.ஜி அலுவலகம் முற்றுகை
- மீன் பிடிப்பதில் தகராறு தொடர்பாக ஐ.ஜி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
- முற்றுகையால் திருச்சியில் இன்று காலை பரபரப்பு நிலவியது
திருச்சி, ஜூலை.20-
திருச்சி மாவட்டம் நத்தமாடிபாட்டி கீழகுறிச்சி கிராமத்தில் கடந்த 300 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் ஊர் பொதுகுளத்ததை அப்பகுதி கிராம மக்கள் ஆடுமாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் வந்த பிறகு கடந்த 6 வருட காலமாக ஊர் பஞ்சாயத்து கட்டுபாட்டில் சென்ற நிலையில், அதில் மீன்குஞ்சுகள் விடப்படாமல் இருந்தது.இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து கடந்த மாதத்திற்கு முன்பு மீன்குஞ்சுகள் விட்டு, நேற்று மீன் பிடிக்க சென்ற போது, அங்கு வந்த ஒருவர் இந்த குளம் தங்களுடைய கட்டுபா ட்டில் உள்ளது என்று கூறி தனக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு, மீன்பிடி யுங்கள் என்று கூறியதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அந்த நபர் திரு வெறும்பூர் காவல்நி லையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்று விடியற்காலை 4 மணிக்கு வீட்டில் புகுந்து காவல்து றையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து இன்று திருச்சி மத்திய மண்டல ஐஐி அலுவலகத்தை அக்கிராமத்தை சேர்ந்த 150 பேர் முற்றுகையி ட்டுள்ளனர். எந்தவித முகாந்தி ரமும் இல்லாமல் கைது செய்ய ப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றுகூறி கோரிக்கைவிடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்