search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி மீது கணவர் போலீசில் புகார்
    X

    மனைவி மீது கணவர் போலீசில் புகார்

    • மனைவி மீது கணவர் போலீசில் புகார் அளித்தார்
    • குடும்ப நடத்த விருப்பமில்லை

    திருச்சி:

    திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்தவர் யூசுப் சித்திக் (வயது 34). இவரது மனைவி தஸ்லிம் பானு (36). இவர்களுக்கு மகள் சாதிகா(2) மகன் சாதிக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த மாதம் 22ம் தேதி கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து வீட்டில் இருந்து தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் தஸ்லீம் பானோ வெளியேறியுள்ளார். மூன்று நாட்களாகியும் அவர் வீடு திரும்பாததால், தொடர்ந்து யூசுப் சித்திக் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, வாழ விருப்பம் இல்லை எனக் கூறி வீடு திரும்ப மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யூசுப் சித்திக் செஷன் நீதிமன்ற காவல் நிலையத்தில் தனது மனைவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×