search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்
    X

    ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

    • 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த கோரிக்கை

    திருச்சி,

    திருச்சி மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் திருச்சி வெஸ்டரி பள்ளியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால் பாண்டி முன்னிலை வகித்தார். இந்தப் போராட்டமானது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப் படியை வழங்க வேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்,ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×