search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்ல சமாரித்தன் விருது வழங்கும் விழா
    X

    நல்ல சமாரித்தன் விருது வழங்கும் விழா

    • நல்ல சமாரித்தன் விருது வழங்கும் விழா நடைபெற்றது
    • ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி சார்பில் நடை பெற்றது

    திருச்சி:

    செயின்ட ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி இணைந்து நல்ல சமாரித்தன் விருது வழங்கும் நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் உள்ள ஏவி அரங்கில் நடத்தியது.

    கிராமங்களில் விரிவாக்கத்துறை செப்பர்டுடன் இணைந்து தன்னார்வமாக கல்வி மற்றும் மக்கள் நல சேவை செய்யும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு செய்தியாளர்கள் ஆகிய தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களை ஊக்குவிக்கவும், பாராட்டவும், கௌரவவிக்கும் விதமாக நல்ல சமாரித்தன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ரொட்டேரியன் கவர்னர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் மற்றும் விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் சே ச மற்றும் ரொட்டேரியன் சீனிவான் ஆகியோர் இவ்விருதுகளை வழங்கினார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பச்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர், சுதா குள்ளம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்து குமாரி, பூதக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் உதவி ஆசிரியர் ராமலிங்கம், குமரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின்தலைமையாசிரியர் சின்னபொண்ணு மற்றும் கொட்டப்பட்டு செயின்ட் லூட்ஸ் உதவி ஆசிரியர் ஆரோக்கிய சுந்தர் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட முப்பது தன்னார்வளர்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்பட்டது

    ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் தலைவர் பாலாஜி செயலர் பிரதீப் குமார் மற்றும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் லெனின், ஜோசப், கிறிஸ்து ராஜா, ஜெயசீலன், பூரண விஸ்வநாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×