என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு
- திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
- வழக்கு பதிந்த போலீசார் 2 ரவுடிகள் கைது செய்துள்ளனர்
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40). இவர் தேங்காய் வியாபாரியான இவர் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் வந்த அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த யுவராஜ் (24), தீபக் (17) ஆகிய இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூபன் மார்ட்டின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து ரூபன் மார்ட்டின் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தீபக் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், இருவரும் ரவுடிகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் தீபக் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்