search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
    X

    சமுக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

    • எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது
    • ஏராளமானவர்கள் பங்கேற்பு

    திருச்சி,

    எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங் கம் திருச்சி மாவட்ட ஆட்டோ நலச்சங்க தலைவர் அல்லா பகஷ் தலைமையில் இப்தார் நிகழ்ச்சி உறையூரில் நடைபெற்றது. ஆட்டோ நலச் சங்க செயலாளர் தமிமுல் அன்சாரி தொகுத்து வழங்கினார். சிட்டி மீட்டர் ஆட்டோ குழு தலை–வர் முகமது இலியாஸ் வர–வேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைவரு–மான இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி மற்றும் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் முகம்மது ரபிக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.நிர்வாகிகள் தலைவர் முஸ்தபா, துணை தலைவர் மீரான் மைதீன், செயலாளர் காஜா முயினுதீன், கட்சியின் மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ், சிராஜ், அப்துல் மாலி, சக்கரை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் புதிய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகிகள் சிவா, கணேசன், சிட்டி மீட்டர் ஆட்டோ குழு செயலாளர் அப்துல் சையது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×