என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
- ராம்ஜிநகர் அருகே சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மூன்றேகால் பவுன் தாலிச் செயின் பறிப்பு
- கைவரிசை காண்பித்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாந்தி (வயது 38).இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடிந்து தனது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நவலூர் குட்டப்பட்டு சுடுகாடு பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.பின்னர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றேகால் பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்..திருடன்.. என கத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தப் பகுதியில் அப்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.இதுகுறித்து சாந்தி ராம்ஜி நகர் போலீஸ் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்