என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியஞ்சோலையில் குளிக்க தடை
- புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது
- பொதுமக்களின் வருகை அதிகரித்ததால் வனத்துறையினர் நடவடிக்கை
உப்பிலியபுரம் ,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர் . ஆடி மாத வழிபாட்டிற்காக பெரியசாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் , கோட்டப்பாளையம் கிருஸ்துவ திருவிழாவிற்கு வந்த பொதுமக்கள் வழிபாட்டை முடித்து புளியஞ்சோலையில் குவிந்ததால் அப்பகுதி களைகட்டியது .வனத்துறை வனவர் பிரியங்கா தலைமையில் வனக்காப்பாளர்கள் மணிகண்டன் , சதீஸ் , கவாஸ்கர் , குமார் , இக்னேஷ் ஆகியோர் சுற்றுலா பயணிகளிடம் மதுபாட்டில்கள் , தடைசெய்யப்பட்ட பொருள்கள் பற்றிய சோதனைக்குட்படுத்தியதன் பின் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர் . பாதுகாப்பு முன்னெச்செரிக்கையாக துர்மரணங்கள் நடைபெறும் பாறைகளுடனுள்ள ஆழமான நாட்டாமடு பகுதியை சுற்றி சிகப்பு துணிகளை கட்டி தடைசெய்யப்பட்டதன் பேரில் , பொதுமக்கள் ஏமாற்றத்துடன் நீரோட்டங்களில் நீராடினர். உப்பிலியபுரம் போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்