என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் அன்பில் பொய்யாமொழி 23-ம் ஆண்டு நினைவு நாள் - அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
திருச்சி :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், வன்னை அரங்கநாதன், செந்தில், மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றியச்செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்