search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் சிகரெட் தீ உடலில் பற்றி முதியவர் கருகி பலி
    X

    திருச்சியில் சிகரெட் தீ உடலில் பற்றி முதியவர் கருகி பலி

    • வீட்டில் தனியாக இருந்த துரைராஜ் கட்டிலில் படுத்துக்கொண்டே சிகரெட் பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.
    • உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்த துரைராஜ் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி இ.பி. ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 71). இவருக்கு ரத்த கொதிப்பு காரணமாக கை, கால்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைராஜ் கட்டிலில் படுத்துக்கொண்டே சிகரெட் பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் எதிர்பாராத விதமாக சிகரட்டில் இருந்த தீப்பொறி கட்டிலில் விழுந்து தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்த துரைராஜ் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×