என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் ரூ. 3.45 லட்சம், 4 பவுன் நகை மோசடி
- பெண்ணிடம் ரூ. 3.45 லட்சம், 4 பவுன் நகை மோசடியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்து முன்னணி நிர்வாகி உட்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி:
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது56). இவர் தன் மகன் சூரியராஜுக்கு அரசு வேலை வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில் சாந்திக்கு இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானார். அப்போது அவர், சாந்தியிடம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதனை நம்பி சாந்தி 3.45 லட்சம் பணம் மற்றும் 4 பவுன் சவரன் தங்க செயின் ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது.
வேலை கிடைக்காததால், சாந்தி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் சாந்தியை கடுமையான வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியுள்ளனர்.
இது குறித்து உறையூர் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரியின் அடிப்படையில் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் , மீனா, ராஜேஸ்வரி, வசந்தி, இன்னொரு சாந்தி, மணிமேகலை உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்