என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி
- வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தனர்
- கணவன்-மனைவி மீது வழக்கு
திருச்சி:
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் புனிதா (வயது 40). இவரிடம் லால்குடி மேல பெருங்காவூர் நடுத்தெருவை சேர்ந்த ரூபா (38) மற்றும் அவரது கணவர் ஜெரால்ட் ரூபன் (42) ஆகியோர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பிய புனிதா கடந்த 2020 செப்டம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை தன்னுடைய சகோதரருக்கு வேலைக்காக ரூபா மற்றும் ஜெரால்டு ரூபன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.23 லட்சத்து 95 ஆயிரம் பணமாக பல்வேறு தவணைகளில் வங்கி மூலம் செலுத்தியுள்ளார்.
ஆனால் இதுவரை வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்ட போது அதனை தர மறுத்துள்ளனர்.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூபா மற்றும் ஜெரால்ட் ரூபன் ஆகியோர் தங்களுடைய செல்போன் எண்களை மாற்றியுள்ளனர். அவர்கள் இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி நேற்று கொள்ளிடம் காவல் நிலையத்தில் புனிதா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்