search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரமைப்பு பணி முடிவடைந்ததால் தாண்டிக்குடி மலைப்பாதையில் போக்குவரத்து தொடக்கம்
    X

    சேதம் அடைந்தசாலையில் போக்குவரத்து தொடங்கியதை படத்தில் காணலாம்.

    சீரமைப்பு பணி முடிவடைந்ததால் தாண்டிக்குடி மலைப்பாதையில் போக்குவரத்து தொடக்கம்

    • கொடகை்கானலில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    கடந்த 29ம் தேதி அதிகாலை பெய்த கன மழையால் மலைப்பாதையில் உள்ள தாண்டிக்குடி- பட்ட லங்காடு பிரிவு இடையே தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்க ப்பட்டது. இதற்கிடையே மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    ஆத்தூர் நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடந்தது. சீரமைப்பு பணி முடிவடை ந்ததையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் இந்த மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கி யது. இன்று காலை முதல் வழக்கம் போல் பஸ், கார், லாரி, ஜீப் போன்ற வாக னங்கள் இயக்கப்படுகின்றன. 8 நாட்களுக்கு பிறகு மலைப்பாதையில் போக்கு வரத்து தொடங்கியதால் தாண்டிக்குடி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×