search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்
    X

    10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

    • 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
    • பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பலர் ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மீது பொதுமக்கள், அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஓராண்டு காலமாக மாவட்ட கலெக்டருக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கோவை மாவட்டத்தில் உள்ள 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த செயலா ளர்களும் பணியிடமா ற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அன்னூர் ஒன்றிய பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இது போன்ற நடவடி க்கையில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டருக்கு காரமடை வழிக்காட்டி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×