search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஜாரில் போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    உடன்குடி பஜாரில் போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • பஜார் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சுமார் 15நிமிடம் வரை அப்படியே நின்று விடுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் போக்குவரத்து காவலர் இல்லாததால் ஒரு வழிப்பாதையான கீழ பஜார் பகுதியில் வாகனம் செல்லுவது மீறப்படுகிறது.

    இதனால் பஜார் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிபடுகின்றனர்.

    எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் சுமார் 10 நிமிடத்திலிருந்து 15நிமிடம் வரை அப்படியே நின்று விடுகிறது. இதனால் வாகனங்கள் வரிசையாக நின்று விடுகிறது. அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க உடன்குடி பஜார் 4 சந்திப்பில் போக்குவரத்து காவலரை நிறுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×