என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வையப்பமலை அரசு பள்ளிக்கு மேஜை நாற்காலி, கணினி வழங்கல்
- அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜை நாற்காலி, கணனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வேர்டு நிறுவனமும், சென்னை கொமாட்சு நிறுவனமும் இணைந்து வேலகண்டம்பட்டி அருகே உள்ள வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜை நாற்காலி, கணனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை வகித்தார்.வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கொமாட்சு நிறுவனத்தின் மூத்த மேலாளர் கைலாஷ், உதவி மேலாளர் தில்லிபாபு ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு பள்ளிக்கு ஒரு கணினி, ஒரு பிரிண்டர், 4 பீரோ மற்றும் மாணவ, மாணவிகளுக்கான 50 ஜோடி மேஜை, நாற்காலிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
வேர்டு நிறுவனத்தின் ஆலோசகர் ராதாசீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.முடிவில் வேர்டு நிறுவன திட்ட மேலாளர் ரகுவரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரி யைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்