search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாங்கிணறு, பல்லடம் நாரணாபுரம் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பூலாங்கிணறு, பல்லடம் நாரணாபுரம் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா். மின் தடை ஏற்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை சேடபாளையம், 63.வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×