என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
- 32-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
- 17 ஆயிரத்து 700 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 32-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவக்கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை உட்பட பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தவிர 17 ஆயிரத்து 700 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 21 லட்சத்து 38 ஆயிரத்து 014 பேர் முதல் தவணையும், 16 லட்சத்து 77 ஆயிரத்து 192 பேர் இரண்டாம் தவணையும் என மொத்தம் 39 லட்சத்து 702 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதிக பட்சமாக கோவிஷீல்டு தடுப்பூசியை 31 லட்சத்து 77 ஆயிரத்து 455 பேரும், கோவேக் ஷின் தடுப்பூசியை, 16 லட்சத்து 7 ஆயிரத்து 93 பேரும் செலுத்தியுள்ளனர்.
நடப்பாண்டு 12 முதல், 14 வயது பிரிவினருக்கு செலுத்தப்பட்டு வரும் 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 677 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்களே குறைந்த பட்சமாக (4.84 லட்சம் பேர்) தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிகபட்சமாக 18 வயதை கடந்த 22 லட்சத்து 23 ஆயிரத்து 417 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 45 முதல் 60 வயது பிரிவில் 8.64 லட்சம் பேரும், 15 முதல் 17 வயது பிரிவில் 1.61 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 243 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் மாவட்டத்தில் 37.77 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். ஜூன் மாதம் நடப்பு மாதம் நடந்த இருமுகாம்கள் கடந்த, 15ந் தேதி முதல் தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையால் இரண்டு மாதத்துக்குள் 39 லட்சம் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்