என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து தாராபுரத்தில் நாளை ஆர்ப்பாட்டம் - தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
- இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது.
- காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் தாராபுரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை நடக்கிறது.
இது குறித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்த திட்டத்தை தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது. இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கழக பிரதிநிதிகள், துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்