search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

    • வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 21.4.2023 காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியா ர்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலைநா டுநர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர்.

    எனவே வேலைநாடுப வர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளி ப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்க ளை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறிய ப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.

    தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ண ப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு எண் இரத்து செய்யப்பட மாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×