search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி இ-சேவை மையத்தில்  அலைக்கழிப்பு- பொதுமக்கள் புகார்
    X
    இ- சேவை மையம். 

    அவிநாசி இ-சேவை மையத்தில் அலைக்கழிப்பு- பொதுமக்கள் புகார்

    • பொதுமக்களுக்கு ஆதார் அட்டை எவ்வித சிரமமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆதார் , ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இ சேவை மையத்திற்கு வருகின்றனர்.

    அவினாசி:

    அவினாசி தாலுகா அலுவலக வளாகத்தில் பொது இ.சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அவினாசி ஒன்றிய பகுதியை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆதார் , ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இ சேவை மையத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் , இச்சேவை மையத்திற்கு வரும் மூத்த குடிமக்கள், வடமாநில தொழிலாளர்கள், ஏழை நுகர்வோரின் தகவல் படிவத்தில் பிழை உள்ளதாக கூறி அவர்களை அலைகழிப்பதுடன் தாலுகா அலுவலகத்தின் வெளியில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான ஜெராக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சென்டருக்கு அனுப்பிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆதார் அட்டை எவ்வித சிரமமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×