search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 30-ந்தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 30-ந்தேதி தொடங்குகிறது

    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
    • முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வருகிற 30-ந் தேதி உடுமலை ஜி.விசாலாட்சி கலை அறிவியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 5-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6-ந் தேதி பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 12-ந் தேதி பொங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 13-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது.

    இதுபோல் 18-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், 26-ந் தேதி வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், செப்டம்பர் மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி பெதப்பம்பட்டி என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் உதவிகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் இந்த முகாமில் வழங்கப்படும்.

    முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×