search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் உதவி
    X

    அ.தி.மு.க. சார்பில் சிறுவர்களுக்கு ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றை திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான லதா சேகர் வழங்கிய காட்சி.

    அ.தி.மு.க. சார்பில் உதவி

    • திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
    • ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை 11 பேரை திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான லதா சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    இதில் அ.தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் பழனிச்சாமி, நகர துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திகேயன், அவைத் தலைவர் மாரிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் கோபால், அம்மா பேரவை ராஜேந்திரன், கவுன்சிலர்கள் நடராஜ், தனலட்சுமி, காயத்ரி, தங்கவேல், பானுப்பிரியா, தங்கம், ரேவதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×