search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்பிடிக்க ஏலம்
    X

    கோப்புபடம்

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்பிடிக்க ஏலம்

    • இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
    • ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டது போன்ற புகழ்பெற்ற ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் உள்ளது.

    இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் அதிக அளவு உற்பத்தி ஆனதால் மீன்களை பிடிக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் நடந்தது. இதில் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×