என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்பிடிக்க ஏலம்
Byமாலை மலர்24 Jun 2023 4:19 AM GMT
- இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
- ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டது போன்ற புகழ்பெற்ற ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் உள்ளது.
இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் அதிக அளவு உற்பத்தி ஆனதால் மீன்களை பிடிக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் நடந்தது. இதில் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X