search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் 2 நாட்கள் செயல்படும் - ஆணையர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் 2 நாட்கள் செயல்படும் - ஆணையர் அறிவிப்பு

    • அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
    • ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை 30.4.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை நாளை 29 ,30-ந்தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை6 மணி வரை செயல்படும்.மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவ லகங்கள்,குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தண ம்பாளையம், வீரபாண்டி, முருகம்பா ளையம், ஆகிய கணிணி வரிவசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.எளிய முறையில் இணையதளம் வழியாக வரி செலுத்தும் சேவையைபயன்படுத்த Use "Quick Payment" or "Register &, Login" to https://tnurbanepay.tn.gov.in வழியாக செலுத்தலாம். தொடர்ந்து நேற்று வரை 5,130 நபர்கள் வரிகளை செலுத்தி, சுமார்ரூ.9,81,994 ஊக்கத்தொகையான 5 சதவீதத்தின் படி வழங்க ப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரையினை செலு த்தி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பினைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×