search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் கஞ்சா பறிமுதல்

    • 27 கிலோ சிக்கியது
    • முதியவர் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆம்பூர் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயில்வே போலீசார் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோனமூளை பகுதியைச் சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 61) என்பவரை கைது செய்தனர். இவர் துணி பகுதியில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு திருப்பூரில் விற்பனை செய்வதற்காக கடத்தியதாகவும் டிக்கெட் எதுவும் எடுக்காமல் பயணம் செய்தது தெரிவித்தனர்.

    இதனையடுத்து தனிப்படையினர் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×