search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவன் தற்கொலை
    X

    பிளஸ்-2 மாணவன் தற்கொலை

    • விஷம் குடித்து மயங்கி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை :

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி லட்சுமண நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விமல் (வயது18). இவர் பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்நிலையில் விமல் பொறுப்பு இல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர் திட்டியதால் விமல் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×