search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடியில் ரெயிலில் கஞ்சா பறிமுதல்
    X

    வாணியம்பாடியில் ரெயிலில் கஞ்சா பறிமுதல்

    • 5 கிலோ சிக்கியது
    • ரெயில்வே போலீசார் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் இணைந்து சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் குழு சோதனை செய்தனர். அதில் கழிவறை அருகே கிடந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×