search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான தடகள போட்டி
    X

    மாவட்ட அளவிலான தடகள போட்டி

    • வருகிற 2-ந் தேதி நடக்கிறது
    • 28-ந் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 14,16,18 மற்றும் 20 வயது பிரிவுகளில் தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகள் வரும் அக்டோபர் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பங்கேற்பார்கள்.

    எனவே தங்கள் பள்ளி, கல்லூரியில் பயிலும் தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு மாவட்ட தடகள சங்க செயலாளர் எம்.சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் சரியான வயது சான்றிதழ் உடன் தங்களது உடற்கல்வி ஆசிரியர் உடன் வரும் 28-ந்் தேதிக்குள் தனி தகவல் படிவமும், பள்ளி கல்லூரிக்கான படிவத்தையும் பூர்த்தி செய்து ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எந்த வித நுழைவு கட்டணமும் இன்றி இலவசமாக தங்களது வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது tdaa635601@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போட்டியில் பங்கு பெரும் விளையாட்டு வீரர்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    அக்டோபர் மாதம் 2-ந்் தேதி அன்று காலை 7 மணி முதல் மாணவ மாணவிகளுக்ன போட்டிகள் நடத்தப்படும் இப் போட்டியில் பங்கு பெரும் வீரர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, வயது சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அனைத்தையும் கொண்டு வர வேண்டும் ஒருவர் 2 போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரே பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

    வரும் 28-ந் தேதிக்கு பிறகு வரும் வருகை படிவங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் தகவலுக்கு மாவட்ட தடகளப் சங்கம் செயலாளர் 9443966011 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×