search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசலிகுட்டை முருகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    பசலிகுட்டை முருகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    • ஆடி 18, ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது
    • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குன்றின் மீது உள்ள பசலிகுட்டை சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ளது. ஆடி 18, ஒட்டி சுப்பிரமணிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, பெரிய, சிறிய, தேர் எடுத்து வந்தும் பொதுமக்கள் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர், கோயிலுக்கு நல்லதம்பி எம் எல் ஏ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்னிசை கச்சேரி மற்றும் வான வேடிக்கைகள் நடந்தது. கோவிலில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு இன்று கலெக்டர் அமர்குஷ்வாஹா உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    Next Story
    ×