என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.49 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சியில் கள்ளியூரில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகள் கட்டுமான பணி, ரூ.4.55 லட்சம் மதிப்பில் கழிவறைகள் கட்டுமான பணி, நாயணத்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் ரூ.1.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 மதிப்பில் கட்டப்பட்டுவரும் கட்டுமான பணி, அக்ராகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.98 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிறுபாலம் அமைக்கும் பணி, ரூ.7.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணி, 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் புதிய நீர்நிலை உருவாக்கும் (அமிர்தசர்வர்) பணி, மல்லப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வகையான மரங்களுக்கு நீர்பாசனத்திற்காக மணிவரப்பு அமைக்கும் பணி என மொத்தம் ரூ.49.10 லட்சம் மதிப்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக வழங்குப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமின்றி உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நடைபெற்று வருகின்ற பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகிய கட்டுமான பணி, புதிய நீர்நிலை உருவாக்கும் பணி, பல்வேறு வகையான மரங்களுக்கு நீர்பாசனத்திற்க்காக மணிவரப்பு அமைக்கும் பணி ஆகிய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், உதவி பொறியாளர் சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்